முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.