யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறிய உறுப்பினர்..!

யாழில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான ஹிருசன் என்பவர் தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம் (15) கோப்பாய் பகுதி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசியத்தின் இருப்பை கருதியும் எமது ஈழத் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதைகளை எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற எதிர் நோக்குடன் தனது சுய விருப்பில் வெளியேறுவதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *