
2024 ஆம் கல்வியாண்டில் பரீட்சைத் திணைக்கள பெறுபேற்று பகுப்பாய்வில் வடமேல் மாகாணம் தேசிய மட்டத்தில் முதல் நிலையினை பெற்றுக்கொண்டது. வடமேல் மாகாணத்தில் பாடசாலை ரீதியில் (இரண்டு தடவையும்) பரீட்சைக்குத் தோற்றிய 24,604 மாணவர்களில் 17,106 (69.53%) மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதிபெற்றனர்.