
முன்னர் குறிப்பிட்டது போல ஓர் இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகள் உயிரற்ற, அசையா, சடப் பொருளாக இருந்தால் எம்மீது எந்தவிதமான பாதிப்பினையும் செலுத்தாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால், கருவிகள் எம்மிடையே சமூக ஊடாட்டத்தை தூண்டிவிட்டு இருக்கின்றன. எமது உணர்வுகளை செயல்பட வைக்கின்றன. தம்மை பயன்படுத்த எம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. அதற்குத் தனியான இலக்கு உண்டு. எமது உளவியலை எமக்கு எதிராகத் தூண்டிவிடுகிற வல்லமையும் அதற்கு உண்டு.