துசித ஹல்லோலுவ துப்பாக்கிச் சூடு: 4 விசாரணைக் குழுக்கள் களத்தில்..!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை குறிவைத்து நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரிக்க நான்கு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும் அந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகள் தற்போது விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை கொழும்பு குற்றப்பிரிவுக்கு (சிசிடி) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *