இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிருக்கான இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ கவுப் மற்றும் இத்தாலியின் ஜேஸ்மின் பவோலினி ஆகியோர் பலப்பரீட்சை நடாத்தினார்கள். முதல் செட்டை யார் கைப்பற்றுவார்கள் என்ற பரபரப்பு போட்டி முழூவதும் தொடர்ந்தது.
இருந்தும் ஆதிக்கம் செலுத்திய பவோலினி முதல் செட்டை 6-4 என கைப்பற்றி அசத்தினார். பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் அவருக்கு சவாலாக காணப்படவில்லை. இலகுவாக கவுப்பை வீழ்த்தி 6-2 என கைப்பற்றி அசத்த ஒட்டுமொத்தமாக 6-4 ,6-2 என இலகுவாக நேர்செட் கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றிப்பெற்று இத்தாலிய சம்பியனாக மாறினார் இத்தாலியின் பவோலினி.
இது இவ்வாறு இருக்க மற்றுமொரு சாதனையாக பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினி -சாரா எர்ரானி ஜோடி, ஜெர்மனியின் எலைஸ் மெர்டன்ஸ்- ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா ஜோடி உடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய பலோலினி ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாஸ்மின் பலோலினி சாம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.