
சட்டமா அதிபர் திணைக் களத்தின் உதவியுடன் 100 வருடம் பழைமைவாய்ந்த மன்னார்– புத்தளம் பாதையை மூடிவிடுவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். இந்த பாதை அம்பாந்தோட்டையிலோ வேறு பிரதேசங்களிலோ இருந்திருந்தால் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த பாதையை மூடிவிட உதவி செய்திருக்காது. இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.