
காஸாவில் நிகழும் மனிதாபிமான பேரழிவினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், போர்நிறுத்தம் மற்றும் முற்றுகையை நீக்கவும் அழைப்பு விடுப்பதற்காக இலங்கையின் அனைத்து அரசியல் தலைவர்களும் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடினர். இங்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் பலஸ்தீன சுதந்திரக் கோரிக்கைக்கு இலங்கையின் முழு ஆதரவையும் தெரிவித்தனர். அரபு மொழியில் பேரழிவு என்று பொருள்படும் – ‘அல் நக்பா’வை நினைவுகூரும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர்கள் தங்கள் உறுதி மொழிகளை மீண்டும் உறுதிப்படுத்தினர்.