
இலங்கையிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை யார் பெறப்போகின்றனர் என்ற தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது. தேர்தல் முறையில் இருக்கும் ஒரு பாதகமான நிலை இதுவாக இருந்தாலும் சிறுபான்மையினர் மற்றும் சிறு கட்சிகளுக்கு இதுவொரு சாதகமான அரசியல் காப்பீடாகவே கருத முடியும்.

