நிலவும் சீரற்ற காலநிலை-1,520 பேர் பாதிப்பு..!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களில் 400ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் மொத்தம் 1,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் 325 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *