முல்லை மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் "மனிதாபிமான உதவிகள்" வழங்கி வைப்பு..!

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினதும் இந்திய மக்களினதும் “மனிதாபிமான உதவிகள்” வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றையதினம்(28) மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் யாவ் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட மீனவர்கள் முப்பது பேருக்கும், அதேநேரம் முல்லைத்தீவு மாவட்ட சமாசங்களின் சங்கத்தினருக்கும் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகள் ஆகியவற்றை வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *