சீரற்ற காலநிலையில் கடற்கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும் , காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனக் கடற்படை மற்றும் மீனவ சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *