தென் கொரியாவின் குமியில் நடைபெறும் 26 ஆவது ஆசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது நாளில், இலங்கை மகளிர் அணி 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.
நதீகா ராமநாயக்க, சயுரி மெண்டிஸ், ஜெயேஷி உத்தரா மற்றும் நிஷேந்திர பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இலங்கை மகளிர் பந்தய தூரத்தை 3:36.67 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தையும் (3:34.18 வினாடிகள்) வியட்நாம் மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தையும் (3:34.77 வினாடிகள்) வென்றது.
அதேநேரம், இலங்கை ஆண்களுக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
அவர்கள் பந்தய தூரத்தை 3:08.55 வினாடிகளில் நிறைவு செய்தனர்.
இலங்கை ஆடவருக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்ட அணியில் அருண தர்ஷன, சதேவ் ராஜகருணா, கல்ஹார இந்துபா மற்றும் கலிங்க குமாரகே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்