பஸ் கட்டண திருத்தம் ஓகஸ்ட் வரை ஒத்திவைப்பு.!

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்   அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் வழக்கமாக  நடைமுறைக்கு வரும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தமே இவ்வாறு  ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அறிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன  தெரிவித்தார். இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில், 

“பேருந்து கட்டண திருத்தம் வரவிருந்தாலும், ஓகஸ்ட் வரை தற்போதுள்ள கட்டணங்களைத் தொடர நாங்கள் முடிவு செய்துள்ளோம்.வருடாந்த கட்டண திருத்தம் வழக்கமாக ஒவ்வொரு ஜூலை மாதமும் நடைமுறைக்கு வரும்.

ஆனால் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு அதை தாமதப்படுத்த சங்கத்திற்கு விருப்புரிமை உள்ளது . “ஒரு சங்கமாக, பொறுப்பான அமைச்சர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, கட்டண திருத்தங்களை நாங்கள் முன்னர் ஒத்திவைத்துள்ளோம்.

இந்த முடிவு தொடர்பாக மற்ற பேருந்து சங்கங்களுடன் எதிர்வரும் வாரங்களில் கலந்துரையாடல்களை நடத்தவும்  திட்டமிடப்பட்டுள்ளது.- என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *