யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி இடையில் சந்திப்பு

  

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் கட்சிகள் பெற்றுக் கொண்ட ஆசனங்களை கொண்டு சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீபன் ஆகியோருடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்துரையாடினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *