ரஷ்ய ராணுவ தளத்தை சிதைத்த உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் – 40 விமானங்கள் சேதம்

ரஷ்ய ராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் சேதமடைந்துள்ளன.

உக்ரைன், ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சைபீரியாவின் ஸ்ரீட்னி கிராமத்தில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தை நாசம் செய்துள்ளது.

இது ரஷ்ய எல்லையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ள முதல் தாக்குதல் என இர்குட்ஸ்க் மாநில ஆளுநர் உறுதி செய்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) திட்டமிட்டு நடத்திய ‘Pavutyna’ அல்லது ‘Web’ எனும் குறியீட்டுப் பெயரில் நடந்த இந்த சிறப்பு நடவடிக்கையில், 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ விமானங்கள் இலக்காக்கப்பட்டதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலால், பெலாயா விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இது போர் ஆரம்பமானதிலிருந்து உக்ரைன் நடத்திய மிகவும் சேதப்படுத்தும் தாக்குதல் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *