தேசிய சுற்றுச்சூழல் வாரத்துடன் இணைந்து, தூய்மை இலங்கை( Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நேற்றையதினம்(04) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண சபையின் நிறுவனத் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.