
இலங்கை முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி நாட்டின் சட்டங்களையும் மதித்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தமது வழிகாட்டலில் வலியுறுத்தியுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஷ்வி, ஃபத்வாக் குழு பதில் செயலாளர் அஷ்-ஷைக் எம்.டி.எம். ஸல்மான் இணைந்து வெளியிட்டிருக்கும் குறித்த உழ்ஹிய்யா வழிகாட்டலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும்.