
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பொது நிதியை அரசியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்திய இரண்டு அரசியல்வாதிகள் இன்று சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக விளையாட்டு கழகங்களுக்கு விநியோகிப்பதற்காக கரம்போர்டுகள் மற்றும் செக்கர்போர்டுகள் வாங்கியதன் மூலம் அரசுக்கு 53 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, முறையே 20 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.