துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரை வைத்தியசாலையில் சந்தித்த இம்ரான் எம்.பி

துப்பாக்கிசூட்டில் காயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.  

கடந்த செவ்வாய்க்கிழமை(3) திருக்கடலூர் பகுதியில் இருந்து வாழைச்சேனை கடற்பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தாக்குதலுக்கு உள்ளான குச்சவெளி பிரதேச மீனவர் கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையிலே, இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர், நேரில் சென்று, தாக்குதலுக்கு உள்ளானவரின் நலன் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *