
அரபா நாளில் நோன்பிருப்பது சுன்னத்தா இல்லையா என்ற ஒரு கருத்து வேறுபாடு உண்டு. இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரையில் அந்த நாளில் நோன்பு நோற்பது தான் சிறந்தது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால்,நோன்பு நோற்கத் தேவையில்லை என்று யாரும் கூறினால் அவர்களை யாரும் குறை கூற முடியாது. ஏனென்றால் இது இமாம்களுக்கு மத்தியில் இரு கருத்துக்களுக்கு இடம்பாடான விடயமாகும்.