2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, முளைத்திடட்டும்” (Let it Sprout) என்ற கருப்பொருளின் கீழ், காடுகளை பாதுகாப்பதையும், சுற்றுச்சூழலைப் பராமரிப்பதையும் ஊக்குவிக்கும் விதமாக விசேட மரநடுகை நிகழ்வொன்று நேற்றைய தினம்(05) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ,தேசிய முன்பள்ளிச் சிறுவர்கள் வளர்ச்சி செயலகம், முன்பள்ளிச் சிறுவர்கள் அபிவிருத்தி சபைகள் மற்றும் முன்பள்ளிப் பாடசாலைகள் ஆகியன இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வு கேஸ்பேவ மாநகர சபையின் கீழ் இயங்கும் மதபத்த கெகுலு Madapatha Kekulu முன்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான முன்பள்ளி சிறுவர்கள் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் முக்கிய அதிதிகளாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ், மற்றும் துணை அமைச்சர் நமல் சுதர்சன (Namal Sudarshana), கேஸ்பேவ மாநகர சபைத் தலைவர் கலுமதும்மகே சமரா (Kalumaddumage Chamara), தேசிய முன்பள்ளிச் சிறுவர் வளர்ச்சி செயலக இயக்குநர் வருனி ரஸாதரி (Waruni Rasadari )உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.