எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை திட்டத்தை நேற்று (06) ஆய்வு செய்த பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இந்த திட்டம் 2019 இல் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இது தாமதங்களை சந்தித்தது. ஆனால் இப்போது அதன் இறுதி கட்டுமானக் கட்டத்தில் நுழைந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலை மார்ச் 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.- என்றார்.