நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்றையதினம் காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது.
5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
இருப்பினும், மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிடப்ட்டுள்ளது
சுகாதாரப் பிரச்சினைகள், பதவி உயர்வுகளில் தாமதம், சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 5 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியது.
இதனால் நோயாளர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் இந்நிலையில்,
சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வரமாட்டார் என தெரிவித்தே, வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது