மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து சபைகளை நிறுவுங்கள்-தமிழ்க் கட்சிகளுக்கு அநுர தரப்பு அட்வைஸ்..!

வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி சபைகளை நிறுவத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும் என அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் ஆணையை மீறி எவரும் செயற்பட முடியாது. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து தமிழ்க் கட்சிகள் செயற்பட வேண்டும்.

எந்தச் சபையில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் இடமளிக்க வேண்டும்.

அதைவிடுத்து குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது. அது மக்கள் ஆணைக்குச் செய்யும் துரோகம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *