சூட்சுமமான முறையில் மரக்குற்றிகள் கடத்தியவர் – வசமாக சிக்கியது எப்படி?

சாவகச்சேரிப்பகுதியில் சூட்சுமமான முறையில் காட்டுத்தேக்கு மரக்குற்றிகள் கடத்திய ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சல்லிக்கற்கள் ஏற்றிவருவதைப்போன்று மரக்குற்றிகளுக்கு மேலே சல்லிக்கற்களை போட்டு  சுமார் 15 இலட்சம் பெறுமதியான 18 காட்டுத்தேக்கு மரக் குற்றிகள் டிப்பர் வாகனத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் கடத்திவரப்பட்டது

இந்நிலையில் இன்று மதியம் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வைத்து பொலிசார் மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலிதசெனவிரத்னவின் வழிகாட்டலில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் சோதனைகள் மேற்கொள்ளப்ட்டு வருகின்றது

இந்நிலையிலேயே போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *