
கடந்த 25 ஆண்டுகளாக இருதயநோய் நிபுணராக நான் பணியாற்றி வருகிறேன். இளம் வயதினரிடையே – குறிப்பாக இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில் – மாரடைப்பு அபாயகரமான அளவில் அதிகரித்து வருவது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. 40 வயதுக்குட்பட்டவர்களிடம் அரிதாக இருந்த இந்த நிலை, இப்போது கவலையளிக்கும் வகையில் சாதாரணமாகிவிட்டது. ஒவ்வொரு மாதமும், 30 வயதை அண்மித்தவர்களிலும் 40 வயதை நெருங்கியவர்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுவதை நான் பார்க்கிறேன்.