புகையிரதத்தின் ஊடாக வடக்கிற்கான எரிபொருள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதுடன், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை முதலீட்டு வலயமாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முயற்சியாக 29 வருடங்களின் பின்னர் பெற்றோலியம் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான எரிபொருளை சேமித்து வைக்க கூடியதாக இருக்கும்.
இவ்வளவு காலமும் வேறு இடங்களில் இருந்து தான் எமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொண்டிருந்தோம்.
இன்று முதல் காங்கேசன்துறையில் இருந்து விநியோகிக்க கூடிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனூடாக இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்துரைக்கையில்,
காங்கேசன்துறை மிக வேகமாக முன்னேறி கண்கொண்டு வருகின்ற பகுதி கடல் மற்றும் ஆகாய மார்க்கமாகவும் தரைவழி யாகவும் வலி வடக்கின் காங்கேசன்துறை யில் பெற்றோலியம் கூட்டுதாபனத்தின் எரிபொருள் களஞ்சியசாலை அமைக்கப்பட்டிருப்பது, வடமாகாணம் முழுவதும் எரிபொருளை தடையின்றி விநியோகிக்க கூடிய சேவையை இன்று முதல் வழங்ககூடியதாக இருக்கின்றது.
எனவே மக்களுக்கு இதை வழங்குவதற்கு இந்த திட்டத்தை செய்துதந்த அரசாங்கத்திற்கும், அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொண்டு, மேலும் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்து மக்களின் தேவைகள் அனைத்தையும் வழங்க இருக்கின்றோம்.
புகையிரதத்தின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கான எரிபொருளை எடுத்து வர இருக்கின்றோம்.
அதன் மூலம் இன்னும் பல சேவைகளும் வேலைவாய்ப்புக்களும் மக்களுக்கு கிடைக்கும். எனவே, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.