வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை தற்போது சுற்றுலா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றது என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹெந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் செயலிழந்த வாழச்சேனையின் காகிதத் தொழிற்சாலை இப்போது இலாபத்தில் இயங்கி வருகிறது. மேலும் அதன் நீண்டகால கடன்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது .
உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்காக புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழிற்சாலையை மீண்டும் உயிர்ப்பிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு அருங்காட்சியகம், ஒரு சாகச முகாம் தளம், ஒரு புகைப்பட படப்பிடிப்பு மையம் மற்றும் புதிய சுற்றுலா வசதிகள் உட்பட சுற்றுலா தொடர்பான பல்வேறு முயற்சிகள் இப்பகுதியில் உருவாக்கப்பட்டு வருகின்றன.- என்றார்.