இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒன்லைன் வசதி குறித்து இலங்கை சுங்கத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதமான வழிகளில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் வாகனங்களை வாங்குபவர்கள் அறியாமலேயே வாங்குவதைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
மோட்டார் வாகன சரிபார்ப்பு சேவையின் அதிகாரப்பூர்வ சுங்க வலைத்தளத்தின் [https://services.customs.gov.lk/vehicles] ஊடாக சரிபார்க்க முடியும்
இந்த அமைப்பைப் பயன்படுத்த, பயனர்கள் வாகனத்தின் சேசிஸ் எண் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும்.
வழங்கப்பட்ட எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்
இதன் மூலம் வாகனம் சுங்கத்தால் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளதா அல்லது சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதா என்பது குறித்த தகவல்களை அணுக முடியும்.