மும்பையில் ஓடும் ரயிலிருந்து வீழ்ந்து 5 பயணிகள் உயிரிழப்பு!

மும்பையில் இன்று (08) காலை அதிக நெரிசல் கொண்ட ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஐந்து பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) ரயில் நிலையத்தில் இருந்து லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்த 12534 புஷ்பக் ரயிலிருந்து தவறி வீழ்ந்தே பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 10-12 பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Passengers fall onto the track from a local train going towards the Chhatrapati Shivaji Maharaj Terminus in Mumbai. (News18)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *