தாய்வான் தடகள ஓபன் 2025 போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தில்ஹானி லெகாம்கே 56.62 மீற்றர் தூரம் சிறப்பாக எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இது இலங்கையின் சிறந்த கள தடகள வீரர்களில் ஒருவராக அவரது நிலையை வலுப்படுத்தியது.
இதற்கிடையில், ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் சாமோத் யோதசிங்க 10.38 வினாடிகளில் கடந்து சென்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அண்மைக்காலமாக உலகளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பலர் தமது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.