700 மில்லியனுக்கும் அதிக வரி நிலுவை – முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது..!

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரூ.700 மில்லியனுக்கும் அதிகமான வருமான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார,  கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால்  நேற்றுமுன்தினம்  (7) கைது செய்யப்பட்டுள்ளார். 

கிரீன் லங்கா டிராவல்ஸ், கிரீன் சீட் லங்கா மற்றும் கிரீன் ஸ்ரீ லங்கா ஷிப்பிங் ஆகியவற்றின் தொழிலதிபரும் இயக்குநருமான நாணயக்கார, உள்நாட்டு வருவாய்த் துறையின் பல எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக வரி செலுத்தத் தவறிவிட்டார் என்று  கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண். 9 இல் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

பல அதிகாரபூர்வ அறிவிப்புகளைப் புறக்கணித்த பிறகு, இது தொடர்பான சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.  இதன் விளைவாக மூன்று நீதிமன்ற சம்மன்கள் மற்றும் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.  

நடைமுறையில் ஏற்பட்ட தாமதங்களைத் தொடர்ந்து, அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு செயல் ஐ.ஜி.பி பிரியந்த வீரசூரியவுக்கு நீதவான் நேரடி உத்தரவைப் பிறப்பித்தார். 

இந்த நிலையில் எஸ்.எஸ்.பி ஷானி அபேசேகர தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது நாரஹேன்பிட்டியில் உள்ள ஒரு வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பின் கதவு வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது வளாகத்தை சுற்றி வளைத்திருந்த அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *