யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் இன்று செவ்வாய்கிழமை சிறப்பாக இடம் பெற்றது.
காலை முதல் இரவுவரை அடியவர்கள் காவடி, தூக்குக்காவடி, பாற்செம்பு கரகம் போன்ற நேற்றிக்கடன்களை நிறைவேற்றினர்.
மேலும் விசேட நிகழ்வாக தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் காட்சிகளும் ஆலய முன்றலில் இடம் பெற்றது.
ஆலயத்திற்க்கு பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டுவந்தனர்.