லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக பிணையில் விடுதலை

 

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான  நீதவான் தனுஜா லக்மாலி இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அசோக சேபால, லிந்துலை நகர சபைக்கு சொந்தமான இலக்கம் 12 மாட்டிறைச்சி கடைக்குரிய ஏலத்தின் போது அரசாங்கத்துக்கு 2,380,000 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *