
இலங்கையில் இஸ்ரேலியர்களால் நிறுவப்பட்டுள்ள யூத மத ‘சபாத்’ மையங்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதால் 24 மணிநேர பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் மத, பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பான நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்டுள்ள சபாத் மையங்களின் பாதுகாப்பு குறித்து, நேற்றைய தினம் விடுத்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.