தொடரும் உப்பு தட்டுப்பாடு – 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய திட்டம்!

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம்  திட்டமிட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18,163 மெட்ரிக் தொன் உப்பு நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் மொத்த மதிப்பு 1,291 மில்லியன் ரூபா ஆகும்.

உப்பு இறக்குமதிக்காக 571 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக 30,000 மெற்றிக்தொன் உப்பை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *