கிழக்கின் 100 சிறுகதைகள் , கிழக்கின் கவிக்கோர்வை நூல்கள் அறிமுகம்..!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்படும் கிழக்கின் 100 சிறுகதைகள், கிழக்கின் கவிக்கோர்வை ஆகிய நூல்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.  

கிழக்கின் 100 சிறுகதைகள் இரண்டினது தொகுப்பு மற்றும் கிழக்கின் கவிக்கோர்வை தொகுப்பு ஆகிய நூல்களின் அறிமுக விழா,  திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கின் 100 சிறுகதைகள் இரண்டும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 332  கவிஞர்களது கவிக்கோர்வை கவிதைத்தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 

பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற   நிகழ்வில் கிழக்கின் 100 சிறுகதைகள் இரண்டினது நூலின் அறிமுகத்தினை எமுத்தாளர் க.யோகானந்தனும்,  கிழக்கின் கவிக்கோர்வை நூலின் அறிமுகத்தினை கவிஞர்.மாயன். இ. ஸ்ரீஞானேஸ்வரனும் வழங்க,  எமுத்தாளர்களுக்கு பணிப்பாளரினால் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *