என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு எந்த அருகதையும் இல்லையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் 30 வருடத்திற்கும் மேலாக ஒரே கட்சியிலேயே பயணித்து வருகின்றேன். உங்களைப்போல் பல்வேறு கட்சியிலும் தொங்கி வந்தவன் நான் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.