கண்டாவளை பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் சேவை செயலி அறிமுகம்…!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் சேவை  தொடர்பான செயலி   இன்று(13 )  அறிமுகப்படுத்தப்பட்டது. 

இலங்கையின் முதலாவது பொதுமக்கள் சேவையை வழங்கும் இந்த செயலி கண்டாவளை  பிரதேச செயலகத்தில்  முதல்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டவளை பிரதேச செயலகத்தினால் இணைய வழி  பங்கீட்டு அட்டையும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை  இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ. ரஜீவன்  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் மற்றும் துறை சார்ந்த திணைக்களின் தலைவர்கள் பிரதேச மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்  எனப் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *