
இலங்கையில் அண்மைக்காலமாக பல யூத மதஸ்தானங்கள் இயங்கத் தொடங்கியுள்ள விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கையில் தங்களுக்கான மத வழிபாட்டு நிலையங்களை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகின்ற நிலையில், அவை சட்ட அனுமதிகளின்றி இயங்குவது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் வழியாக, அரசின் பதில்கள் மற்றும் நிலைப்பாடுகள், சமூகத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.