குருணாகலில் இடம்பெற்ற தமிழ் இலக்கிய செயலமர்வு!

வடமேல் மாகாண கலாசார மற்றும் கலை விவகார அமைச்சின் வழிகாட்டலில் மாகாண கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்த தமிழ் இலக்கிய செயலமர்வு இன்று இடம்பெற்றது

குறித்த நிகழ்வானது குருணாகல் மாகாண சபைகாரியாலய கட்டடத் தொகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பேராதணை பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.எஸ்.சுதர்ஷன் , யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.டி.அஜந்தகுமார்  வளவாளர்களாக கலந்து கொண்டு செயலமர்வை நடத்தினார்கள்.

இதில் இலக்கியவாதிகளும், பாடசாலை மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *