இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்றைய தினம் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ஆரோக்கியமான சந்திப்பு இடம்பெற்றது.
பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கையின் வலுவான செயல்திறன் மற்றும் உத்வேகத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி அநுரவுடன் கலந்துரையாடினேன்.
இந்த சீர்திருத்தங்களுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார்.