கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்ய ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கொழும்பு மாநகரசபையின் மேயர் வ்ரே காலி பால்தசார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் மேயர் தெரிவு இன்று இடம்பெற்ற போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் வ்ரே காலி பால்தசார் கொழும்பு மாநகரசபையின் மேயராக தெரிவானார்.
மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
எனது வெற்றி கொழும்பு மாநகரசபையின் இன் வரலாற்று உருவாக்கத்தை குறிக்கிறது . நமக்கு நீண்ட பயணம் உள்ளது. கொழும்பு மாநகரசபை பாராளுமன்றத்தைப் போன்றது அல்ல.
ஆளும் கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ செயல்படாமல், கவுன்சிலை நடத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். கொழும்பை மேம்படுத்த ஒன்றாக பணியாற்றுவது 117 உறுப்பினர்களின் பொறுப்பாகும். ” – என்றார்.

