ஜெனரல் சேர்.ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் உள்ளூரிலிருந்து மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்படும் மருத்துவ மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்யாததன் காரணம் என்ன ? இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்ற கேள்விக்காண் அமர்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் எழுப்பிய கேள்விகளில் உள்ளதாவது,
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புவதற்காக தற்பொழுது இலங்கையினால் செலவளிக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு? மேற்படி பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய மாணவர்களால் செலுத்த வேண்டிய கற்கைநெறிக் கட்டணங்கள் ஒரு மாணவருக்காக அரசாங்கம் செலவளிக்கின்ற தொகை என்பன தனித்தனியாகவும் வெவ்வேறாகவும் சபையில் கூற முடியுமா?, 2025 ஆம் ஆண்டிலிருந்து உள்ளூர் மருத்துவ மாணவர்களை பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்க்காததற்கான காரணங்கள் யாவை?, அதற்காக வைத்திய மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான நிபுணத்துவ வைத்தியர்கள் பறறாக்குறை தாக்கம் செலுத்தியதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள அறிக்கைககளின் உண்மைத்தன்மை யாது?
அப்படியானால் வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பதன் மூலம் மேற்குறிப்பிடப்பட்ட வைத்திய நிபுணத்துவர்களின் பற்றாக்குறை தாக்கம் செலுத்தமாட்டாது என்பதை எவ்வாறு அரசாங்கம் குறிப்பிடும். உள்ளூர் மருத்துவ மாணவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை வழங்காததன் அடிப்படை அவர்களுடைய கல்விக்கனவு , உரிமை மறுக்கப்படுகின்றது.
சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் சாதாரண பிள்ளைகளுக்கு சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கிய அரச அல்லாத உயர் நிறுவனங்கள் ஊடாக கல்வியியல் கலைப் பட்டதாரிகளை பல்கலையில் சரியான முறையில் ஊக்குவிப்பதற்கு மாணவர்களுக்கு வழங்கப்படாத சம அணுகல் உரிமை மீறப்படுகின்றதை அரசாங்கம் மேற்கொள்கின்றதா?
கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பைப் பெற முடியாமல் தடுத்து விட்டு 30 மில்லியன்கள் அதவாது 300 லட்சங்கள் செலவளித்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவ பட்டப்படிப்பை முடிக்குமாறு மாணவர்கள் பணிக்கப்படுகிறார்கள். எனவே இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் வழங்கி அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.- என்றார். சஜித் பிரேமதாசவின் கேள்விகளுக்கு கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் வாரங்களில் பதில் வழங்குவோம் என்று கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.