யாழில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன்- ரயில் மோதி உயிரிழப்பு!

இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரயில் மோதி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் இன்று மாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள ரயில் நிலையத்துக்கு அருகாமையில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்துள்ளார்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த ரயில் இளைஞனை மோதித் தள்ளியது. இந்நிலையில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *