சவால்களை எதிர்கொண்டு அபிவிருத்திக்காக உழைப்போம்.. – கிண்ணியா நகரசபை தவிசாளர் தெரிவிப்பு..!

எதிர்காலத்தில் பல சவால்கள் எமக்கு காத்திருக்கின்றன. இதனை வெற்றி கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாடுபடுவோம் என்று  கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபையின்  தவிசாளராக பதவி ஏற்ற  பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  
இந்த நகர சபையை பொறுத்த வரையில் குறிப்பிட்ட வேலைகளை மாத்திரமன்றி அதன் வெளியில் சென்று இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இந்த நேரத்தில் நாங்கள் எமது உள்ளூர் வருமானங்களைக் கொண்டு இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய கூடிய நிர்ப்பந்தம் இருந்தாலும் கூட எங்களுக்கு மாகாண சபை, மத்திய  அரசாங்கம்,பாராளுமன்றம் போன்றவற்றின் உதவிகளை நாடி   தேவையான அபிவிருத்திகளை பல  இலக்குகளுடன் பயணிக்க  ஆளாகியுள்ளேன்.

கிண்ணியாவில்   பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும்  நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு  இருக்கிறது. உள்ளூரில் உள்ள சமூக நிறுவனங்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் ,துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளையும்   வேலை திட்டங்களையும் தயாரித்து நடை முறைபடுத்தி ஆர்வத்தோடு தொழிற்படுவோம்.

அதற்காக  உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.திண்ம கழிவு, மீள் சுழற்சி,தெரு  மின் விளக்குகள்,  கட்டாக்காலி மாடுகளின் பிரச்சினைகளுக்கான  பல சவால்கள் காணப்படுகின்றன. நிதியை பெறுவதில் பல சவால்கள் இருந்தாலும்   வருமான வழிகளை எவ்வாறு அதிகரிக்க முடியுமோ அதிகரித்து வருமானமீட்டும் சபையாக மாற்றுவோம்.

அந்த வகையில்  அபிவிருத்தியிலும் பாரிய முன்னேற்றங்களை முன்மொழிவுகளை தேவைகளை பிரேரனைகளாக  முன்வைத்து பிரதேச அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் எனவும் திறம்பட  எதிர்காலத்தில் செயற்படுவோம் .- என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *