இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் எஹெலியகொட, மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (18) காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தைத் தொடர்ந்து கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை மோசமாக இல்லை.
மேலும் விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.