கிளிநொச்சியில்அதிகரித்து வரும் பாத்தீனியம் – கட்டுப்படுத்த நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில்  அதிகரித்து வரும் பாத்தீனிய செடியை கட்டுப்படுத்தும் நோக்குடன் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாய போதனாசிரியர பிரிவுகளில் தொடர்ச்சியாக நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது

இந்நிலையில்  சிரமதானம் மூலம் பாத்தீனியம் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

இன்றைய தினம் கிருஸ்ணபுரம் விவசாய  போதனாசிரியர் பிரிவின் தொண்டமாநகர் பகுதியில் சிரமதானமும் மக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

 குறித்த சிரமதானம் மற்றும் விழிப்புணர்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள் ,கிருஸ்ணபுரம் பகுதி விவசாய போதனாசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.துண்டுப்பிரசுரமும் வழங்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *