கிளிநொச்சியில் கனேடிய தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

கனேடிய தூதரக அதிகாரிகளுடனான பால்நிலை சார் வன்முறை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

இலங்கைக்கான கனேடிய தூதரகத்தின்  Counsellor (Development) and Head of Cooperation. Linda Ehrichs, கிளிநொச்சி மாவட்ட அரசாங்கத்திபர் தலைமையிலான  மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பால் நிலை தொடர்பாக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி, பெண்கள் தொடர்பான மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகர்கள், தொண்டு நிறுவனம் சார்ந்தோர் உள்ளிட்டோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். 

கிளிநொச்சி மாவட்டம் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களை வழங்கியிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *